search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நங்கவள்ளி கூட்டுறவு"

    நங்கவள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு வந்து கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். #tamilnews
    நங்கவள்ளி:

    சேலம் அருகே நங்கவள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கடன் சங்கத்தில் ரூ.5 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கடன் சங்கத்தின் போர்டு கலைக்கப்பட்டது.

    தற்போது கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட 73 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று அவர்களுடைய வேட்பு மனுக்கள் பரீசிலனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நங்கவள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலையில் திடீரென திரண்டு வந்து கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். மேலும் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

    கடன் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கணக்கில் 12 கோடி ரூபாயிக்கு மேல் டெபாசிட் செய்துள்ளனர். தற்போது தேர்தல் நடத்தி நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே ஊழல் நடந்ததால் போர்டு கலைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஊழல் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன? உத்தரவாதம் இருக்கிறது. ஆகவே டெபாசிட் தொகையை கொடுத்து விட்டு தேர்தல் நடத்துங்கள். இல்லையென்றால் தேர்தலை நடத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    ×